பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் ஆயிரத்து 441 பேர், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புட்டும் வகையில் மேல்மாகாணத்தில் பொலிஸார் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.