அருங்காட்சியக திணைக்களத்தின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகின்ற சகல அருங்காட்சியகங்களும் நாளை முதல் திறக்கப்படவுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அருங்காட்சிகங்கள் திறக்கப்பட்டிருக்கும். ஒரு நேரத்தில் 15 பேர் மாத்திரமே அருங்காட்சியகங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். 30 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு குழுக்களுக்கும் அருங்காட்சியகத்தை பார்வையிட வாய்ப்பளிக்கப்படும். அதற்கமைய அருங்காட்சியகத்திற்கு வருகைதர எண்ணுபவர்கள், வருகை தரும் தினம் மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளவேண்டுமெனவும் அருங்காட்சியக திணைக்களம் அறிவித்துள்ளது.