டிக்டொக் உள்ளிட்ட 59 சீனா தொலைப்பேசி பயன்பாடுகளை தடை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தொலைப்பேசி பயன்பாடு காரணமாக நாட்டின் இறையான்மைக்கும் பாதுகாப்பிற்கும் மக்களுக்கிடையிலான அமைதிக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய டிக்டொக், எ செட், யூசி ப்ளெரசர் போன்ற சீன தயாரிப்புக்களான 59 தொலைப்பேசி பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. விசேடமாக காஸ்மீரின் லடாக் மாநிலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்ததன் காரணமாக இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறன்து. கடந்த 15ஆம் திகதி ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 20 இந்தி துருப்பினர்கள் கொல்லப்பட்டன. சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா அரச நடவடிக்கை எடுத்தது.