பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைவரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சஜீவ மெதவத்த பொலிஸ் நலன்புரி பிரிவுக்கு இடம்மாற்ற பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன பரிந்துறைத்துள்ளார்.
இப்பரிந்துரை தேசிய ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலி சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளது.
இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைவரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சஜீவ மெதவத்தவை இடம் மாற்றுவது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இப்பரிந்துரையானது தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சஜீவ மெதவத்தையின் இடமாற்றத்தினால் ஏற்படுகின்ற வெற்றிடத்திற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஜி.கே.ஜெ அபோன்சுவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனார்தன தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கென தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரம் இதுவரை கிடைக்கபெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகருடன் தொடர்பபு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.