அடுத்த இருவாரங்களுக்குள் மீனின் விலை குறிப்பிடத்தக்களவு குறைவடையுமென கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லலித் தவுல்கல தெரிவித்துள்ளார்.
மீன் சந்தையில் மீன்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. அதனால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலுமிருந்து மீன்களை எடுத்துவந்து பேலியகொட மீன் சந்தையில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன கூடத்தில் வைத்து தொகை அடிப்படையில் அதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக மீனின் விலையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்படுமென நாம் எதிர்பார்க்கின்றோமென இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.