பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலை தீவு உயர்ஸ்த்தானிகர் உமர் அப்துல் ரஷாக் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. மாலைதீவில் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் இங்கு முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாடு மீள திறக்கப்பட்டதன் பின்னர் மாலை தீவிலுள்ள ஹோட்டல் துறைகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக மாலை தீவு உயர் ஸ்த்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.