கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைமுக நகரத்திற்கான முதலீட்டு திட்டம் கடந்த 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் கடந்த அரசாங்கம் முதலீட்டாளர்களை நாட்டிற்கு வரவழைப்பது குறித்து கவனம் செலுத்த தவறியது. இதனால் முதலீடுகளின் தாமதம் காரணமாக துறைமுக நகரத்தின் அபிவிருத்தி பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் இத்திட்டத்தை தூரிதமாக முன்னெடுப்பது குறித்தும், முதலீட்டாளர்களை நாட்டிற்கு வரவழைப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு வசதிகளின் செயலாளர் பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.