பஸ் முன்னுரிமை வீதி ஒழுங்கை சட்டத்தின் 3ம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது . அதற்கமைய காலை 06.00 மணிமுதல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, இங்குருகட சந்தியில் இருந்து சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆமர் வீதி, மாளிகாவத்தை, மருதானை சந்தி ஊடாக கொழும்பு கோட்டை வரை முன்னுரிமை வீதி ஒழுங்கை சட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தனியார் பஸ் வண்டிகள், இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள், 20 ஆசனங்களுக்கு மேலான இருக்கைகளை கொண்ட அலுவலக போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்வண்டிகள் குறித்த ஒழுங்கையில் மாத்திரம் பயணிக்கவேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.