சீன இராணுவத்தினருக்கு சண்டை கலைகளை பயிற்றுவிக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய எல்லைப்பகுதியில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்திய வீரர்களுடன் மோதல்களில் ஈடுபட்ட சீன இராணுவத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் 22 போர் கலைப் பயிற்சியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குங்பூ மற்றும் உஷு ஆகிய வரலாற்று சிறப்புமிக்க சீன சண்டைக் கலை பயிற்சிகள் தற்போது சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ளன.