இலங்கையில் 2 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை ஆயிரத்து 639 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 383 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 11 மரணங்கள் சம்பவித்துள்ளன. நேற்றைய தினம் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் பங்களாதேஷில் இருந்து வருகை தந்தவர்கள் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இலங்கையர்களில் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப் பட்டுள்ளது.