இலங்கையில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 2010ஆக உயர்ந்துள்ளது. இதேநேரம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2010ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆறு பேர் கடற்படையினர் ஆவர்.
இதுவரை 1619 பேர் குணமடைந்துள்ளனர். 380 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழுள்ளனர். இலங்கையில் 11 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/06/1619.png”]