இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், சீனர்களுக்கு தமது ஹோட்டல்களில் தங்க அனுமதி வழங்கப்பட மாட்டாதென இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். நட்சத்திர ஹோட்டல்களிலும் குறித்த தீர்மானத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சீனர்களை புறக்கணிப்பதால் நட்டம் ஏற்படும் எனினும் நாட்டு பற்றைவிட தமக்கான நட்டம் பெரிதாக தெரியவில்லையென இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.