பாராளுமன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கான காலப்பகுதியை நீடிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இதுவரை பெறப்படவில்லையென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. எனினும் அதற்கான இறுதி தீர்மானம் பெறப்படவில்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தினங்களில் ஆணைக்குழு மீண்டும் கூடி, வாக்கெடுப்புக்கான காலப்பகுதியை நீடிப்பது தொடர்பில் தீர்மானிக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.