இலங்கைக்கு வருகைத்தர முடியாது வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 420 நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். லெபனான், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தே அவர்கள் தாயகத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் லெபனானில் இருந்து 171 பேர் இன்று அதிகாலை 5.41 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நியூசிலாந்திலிருந்து 88 பேர் சில்க் எயார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக நேற்று இரவு நாட்டை வருகைத்தந்துள்ளனர். இதற்கு மேலதிகமாக இந்தியாவில் நிர்க்கதியாகியிருந்த 161 பேர் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக மத்தல விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.