இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான நடராஜசிவம் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் காலமானதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மரணிக்கும் போது அவருக்கு 74 வயதாகும். நீண்ட காலம் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய அவர், திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராகவும் செயற்பட்டுள்ளார். வானொலி நாடகங்களில் மாத்திரமல்லாது, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.