கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஆசியாவில் 120 மில்லியனுக்கும் அதிக சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 6 மாதங்களில் குறித்த நிலை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்ககை விடுக்கப்ப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள சிறுவர்களே அதிகம் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. முறையான வசதிகள் கிடைக்காமை இதற்கு முதற்கட்ட காரணமாக அமைந்துள்ளது.
தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளில் பிரச்சினைகள் தோன்றியுள்ளது. அது தொடர்பில் குறித்த நாடுகளின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென யுனிசெப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.