வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வீசா அனுமதியை தொடர்ந்தும் இடை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் தீர்மானித்துள்ளார். தொழிநுடப் அதிகாரி விவசாய துறை சாராத பிரிவுகளுக்கான உதவியாளர்கள் மற்றும் நிறைவேற்று தரம் கொண்ட அதிகாரிகள் போன்றோருக்கான வீசா வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்படுகிறது.
இவ்வருடத்தின் இறுதி பகுதி வரை இத்தீர்மானம் அமுலில் இருக்கும். கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் தொழிலை இழந்த அமெரிக்க பிரஜைகளுக்கு முன்னுரிமை வழஙற்குவதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவே அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும். கொரோனா வைரஸை காரணம் காட்டி புலம்பெயர் சட்ட திட்டத்தை தீவிரப்புடுத்த ட்ரம்ப் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. .