நாட்டின் மேல் , வடமேல், சப்ரகமுவ , மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்பகுதிகளில் மணித்தியாலயத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.