முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கபடவுள்ளது. கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள 45 ஆயிரம் பொதிகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான பொதிகளில் முகவரிகள் அழிந்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முகவரிகள் அழிந்துள்ள பொதிகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அவற்றை மலேசியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரன்ஜித் ஆரியரத்தன தெரிவித்துள்ளார். மலேசியா ஊடாக இப்பொதிகள் தொடர்பான முகவரிகள் கிடைத்த பின்னர், அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.