யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்றும், டிப்பர் ரக வாகனமும் நேருக்கு, நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் வேகமாக பயணித்தமையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
.