இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதியின் திப்பிட்டிகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றும், பஸ் வண்டியொன்றும் ஒன்றுடன், ஒன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. வேனில் பயணித்த மூன்று வயது குழந்தை சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வேகமாக பயணித்த வேன், பஸ் வண்டியை முந்திச்செல்ல முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. வேனில் பயணித்த குறித்த குழந்தை ஜன்னல் வழியாக தலையை வெளியே இட்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.