இராணுவ அதிகாரிகள் 71 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கேர்னல் பதவியிலிருந்த 41 அதிகாரிகள் பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் லெப்டினன் கேர்னல் பதவியிலிருந்த 30 பேர் கேர்னல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவ தளபதியின் கோரிக்கைக்கமைய, ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவினால் குறித்த பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.