2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் பெரும்போகத்தில் சேதமடைந்த உற்பத்திக்கு இழப்பீட்டை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை இழப்பீட்டை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும். இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பீடு செய்யப்படுமென கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.