இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்றைய தினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகரை சந்தித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சி முக்கியஸ்த்தர்கள் இந்திய உயர் ஸ்த்தானிகரை சந்தித்தனர். மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்;டமானின் யோசனைகளுக்கு அமைய மலையக மக்களுக்காக சில கோரிக்கைகளும் இந்தியா உயர்ஸ்த்தானிகரிடம் முன்வைக்கப்பட்டது. பதுளை , கண்டி உட்பட மலையக பகுதிகளில் தொழிற்ச பயிற்சி நிலையங்களை அமைத்தல், பெருந்தோட்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல், டிக் ஓயா ஆதார வைத்தியசாலையில் தாதியர் கல்லூரி ஒன்றை அமைத்தல் வைத்திய முகாமைத்துவ கல்லூரி ஒன்றை அமைத்து மலையக இளைஞர்களை வைத்திய துறையில் ஊக்குவித்தல், எம்பியுலன்ஸ் வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றும் இந்திய உயர்ஸ்;த்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.