பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாவிட்டால் எந்நேரத்திலும் கொரோனா வைரஸ் இரண்டாம் சுற்று ஆபத்து உருவாகலாமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள ஒருசிலர் வைரஸ் தாக்கத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அலட்சியம் செய்து வருகின்றனர். வைரஸ் பரவலை தடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது அவசியமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் வைரஸ் பரவல் ஆரம்பகட்டத்திலேயே முறியடிக்கப்பட்டுள்ளது. எனினும் அசமந்தப்போக்கான செயற்பாடுகளினால் எந்நேரத்திலும் இரண்டாம் சுற்று ஆபத்து தலைதூக்கலாமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.