கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசியை பரிசலிக்கும் நடவடிக்கை பங்களாதேஷில் ஆரம்பமாகியுள்ளது. அடிப்படை மருந்துகள் இரண்டு பயன்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட்ட விசேட மருந்தொன்று இதற்கென பயன்படுத்தபட்டுள்ளது. பங்களாதேஷின் 4 வைத்தியசாலைகளில் பரிசீலனைகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கென விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்றும் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட நோயார்களுக்கு தடுப்பூசி பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.