பொருளாதாரத்திற்கு உயிர் ஊட்டுவதற்காக பணப்பழக்கத்தை அதிகரிப்பதற்கான 3 யோசனைகளுகட்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துள குணவர்தன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது யோசனைகள் குறித்து விளக்கமளித்தார்.
“இலங்கை மத்திய வங்கியினால் சட்ட ரீதியான இருப்புக்களுக்கு 4 சதவீத்தில் இருந்து 2 சதவீதம் வரை குறைத்துள்ளது. வர்த்தக வங்கிகளில் 100 வைப்புக்கள் காணப்படுமாயின் 2 வைப்புக்கள் மாத்திரமே மத்திய வங்கியில் வைப்பிலிடப்படுகின்றன. 98 சதவீதத்தை பண புழக்கத்தில் விடப்படும் இதன் மூலம் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். இத்தினங்களில் 26 வர்த்தக வங்கிகளில் 10 ஆயிரம் பில்லியன் பெறுமதியான வைப்புக்கள் காணப்புடுகின்றன. இதில் 2 சதவீதம் என்பது 200 பில்லியன் ஆகும். கொள்கை அடிப்படையிலான தீர்மானத்திற்கு அமைய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைதொழிலாளர்களுக்கும் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கூடுதலான கடன் வசதிகளை வழங்க வர்த்தக வங்கிகளுக்கு முடிகிறது. மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்க மேலும் 100 பில்லியன் ரூபா வழங்கப்படுகிறது. ஒரு சதவீத வட்டி வீதத்தின் அடிப்படையிலேயே இது வழங்கப்படுகிறது. வர்த்தக வங்;கிகள் இவற்றை நடுத்தர மற்றும் சிறிய அளவிலான கைதொழிலாளர்களுக்கும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 4 சதவீத வட்டி அடிப்படையில் கடனாக வழங்குகிறது.”