பீஜிங்கிலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானித்துள்ளது. வைரஸ் பரவும் அபாயம் காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைகட்டுப்படுத்தல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒன்லைன் முறையின் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டதையடுது வணிக வளாகங்கள் உள்ளிட் வர்த்தக ஸ்த்தாபனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.