கொரோனா தொற்றி குணமடைந்த கெபித்திகொல்லாவ பகுதி பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றிய போதிலும் வைரஸ் இன்னும் சமூகத்தில் பரவ வாய்ப்பு இல்லையென சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இப்பெண் குவைத்தில் இருந்து கடந்த 18ம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பபட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். முற்றாக குணமடைந்த பின்னர் கெப்பித்திகொல்லாவையில் உள்ள அவரது இல்லத்துக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்றுள்ளார். இப்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டமையினால் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியமையினால் சமூகத்தில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லையென தொற்று நோய் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.