இலங்கை சினிமா வளர்ச்சிக்கும் கத்தோலிக்க மக்களின் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றிய அருட்தந்தை ஏனஸ்ட் போருதொட்ட அவர்கள் தனது 89 வயதில் நித்திய இளைப்பாறினார் .
1931 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 31 ஆம் திகதி மாரவில போருதொட்ட கரதிய கிராமத்தில் பிறந்த அவர் 1957 ஆம்ஆண்டு இறைபணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தின் ஊடாகதனது இறைபணிகளை ஆரம்பித்த அவர் இலங்கையின் சிங்கள சினிமாவின் மேம்பாட்டுக்காக பல்வேறு வழிகளில் பங்காற்றியுள்ளார். சிங்கள சினிமாவுக்கு கத்தோலிக்க சபைக்கும் சிங்கள மொழியின் பயன்பாட்டை உட்புகுத்தி பங்களிப்பை வழங்கியுள்ளார். கிறிஸ்தவ இளைஞர் தொழிலாளர் சமூகத்தை ஒன்று திரட்டி அதன் ஊடாக புதிய வலுவை ஏற்படுத்திய அவர் சிக்னிஸ் எனப்படும் சர்வதேச சினிமா ஆய்வகத்தின் கிளையை இலங்கையில் யு.ஓ.சி, ஐசி என இலங்கையில் தாபித்தார்.