தஜிகிஸ்தான் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிடங்கள் கடுமையாக குலுங்கிய நிலையில், பல கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சமடைந்துள்ளனர். ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. குறித்த நில அதிர்வினை தொடர்ந்து இன்று காலை இந்தியாவின் கஷ்மீர் பள்ளதாக்கிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.