முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜன் எலெக்சான்டர் என மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை சட்டமா அதிபர் 3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார். பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலாவது பிரதிவாதியாக அர்ஜூன் மகேந்திரன் குறிப்பிடப்பட்டுள்ளார். அதற்கமைய அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டவருவதற்கு அரம்பிக்கப்பட்டுள்ள சட்டநடவடிக்கைகளில் திருத்தமொன்று மேற்கொள்ள வேண்டியுள்ளதா என சட்டமா அதபரினால் சிங்கபூர் சட்டமா அதிபரிடம் வினவப்பட்டுள்ளதாக அரச பிரதி சொலிஸ்டர் ஜெனரல் பாரிந்த ரனசிங்க இன்று விசேட மேல் நீதிமன்றில் குறிப்பிட்டார்.
எனினும் அவ்வாறான திருத்தமொன்று மேற்கொள்ள தேவையில்லையென சிங்கபூர் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வழக்கில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்;டுமாயின் அது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் சமர்ப்பனங்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் பாரிந்த ரனசிங்க தெரிவித்தார்.
இவ்வழக்கு விசாரணையானது இன்றைய தினம் சம்பத் அபேகோன், சம்பத் விஜேயரத்ன, சம்பா ஜானகி ராஜரத்ண ஆகிய மூன்ற நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றில் இடம்பெற்றது. இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.