பொலிஸ் அதிகாரியென தெரிவித்து மோசடிகளில் ஈடுப்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட படை பிரிவு தலைமையகத்தில் அமைந்துள்ள சர்வதேச பொலஸ் சங்கத்திற்க சென்ற குறித்த நபர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். குற்ற விசாரணை திணைக்களத்தில் தான் சேவையாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் நாராஹேன்பிட பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர் கொழும்பு 12 பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொலிஸாரென தெரிவித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்த குழுவொன்றையும் நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.