தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. ராஜகிரியவையிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் முதற்தடவையாக நாளை ஒன்றுகூடவுள்ளனர். நாட்டின் சகல மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.