இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுமென உத்தரகாண்ட மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. முகக் கவசம் அணிவதன் ஊடாக வைரஸ் பரவலை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியுமென சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுமென பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.