பொதுத் தேர்தலை முன்னிட்டு 10 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இன்றைய தினமும் வாக்களிப்பு ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தறை, காலி, மட்டக்களப்பு, மொனராகலை, பதுளை, களுத்துறை, புத்தளம், மன்னார், கொழும்பு, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
கொவிட் 19 தொற்று பரவலையடுத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்தும் நோக்கில் வாக்களிப்பு ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்றைய தினம் 6 மாவட்டங்களில் குறித்த செயற்பாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.