மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மீனவ சமூகம் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.