பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்றையதினம் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பங்களிப்புடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் உட்பட சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கமைய இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இதற்கமைய உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமென பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.