உலக சுகாதார ஸ்த்தாபனம் 230 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்காக உலக சுகாதார ஸ்த்தாபனம் 1.9 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கியது. உலக சுகாதார ஸ்த்தாபனத்தின் இலங்கை கிளையின் ஊடாக குறித்த நிதி செலவிடப்பட்டது. எனினும் 230 டொலரை சுகாதார அமைச்சிற்கு உலக சுகாதார ஸ்த்தாபனம் வழங்கியதாக ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டார். இதில் எந்தவொரு உண்மையும் இல்லையென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது