ஜம்மு கஸ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் முன்னெடுத்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. நேற்றிரவு பாகிஸ்தான் இராணுவத்தினரால் ஜம்மு கஸ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய இராணுவ தலங்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனையடுத்து, பாகிஸ்தான் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன