விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 3 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார்.
6 மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய வானிலையை அடுத்து டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அடையாளம் கண்டு சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கபடவுள்ளன. திட்டத்திற்கு பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார்.