வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் 825 பேர் எதிர்வரும தினங்களில் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகளுக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அதற்கமைய, மெனிலா நகரில் இருந்து விமானமொன்று வருகைதரவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலைத்தீவிலிருந்தும் தங்கட்கிழமை பாகிஸ்தான் லாகூர் நகரில் இருந்தும் விசேட விமானங்கள் வருகைதரவுள்ளதாக ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தங்கியுள்ள இந்திய பிரஜைகளின் ஒரு தரப்பினர் எதிர்வரும் 15ம் திகதி மற்றும் 22ம் திகதி ஆகிய இரு திங்கட் கிழமைகளிலும் பெங்குளு}ர் மற்றும் புதுடில்லி நோக்கி அழைத்து செல்லப்படவுள்ளனர். இதேவேளை, இங்கிலாந்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 9 பேருடன் யு.எல்.504 ரக விமானமொன்று இன்று மதியம் நாட்டை வந்தடைந்தது.