மட்டக்களப்பு திருகோணமலை வீதியின் மாங்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்தம குடும்பஸ்த்தர் ஒருவர் பலியாகியுள்ளார். காத்தான்குடியிலிருந்து தோப்பூர் பகுதிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது மாங்கேணி பகுதியில் முச்சக்கர வண்டி தடம்புரண்டுள்ளது. இதன்காரணமாக அவர் உயிரிழந்திருக்காலாமென ஆரம்பகட்ட விசாராணைகளில் தெரியவந்துள்ளது. வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.