அமெரிக்காவின் மினியா பொலிஸ் நகர பாதுகாப்பு பணிகளை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொலிஸ் திணைக்களத்தை முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நகர மேயல் ஜேகப் பிரே தெரிவித்துள்ளார்.
கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்ட் வெள்ளை இன பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து அமெரிக்கா முழுவதும் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றன. தொடர்ந்தும் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெற்றுவருவதால் அமெரிக்காவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜோர்ஸ் புளொய்ட் உயிரிழந்த மினியா பொலிஸ் நகரின் பொது பாதுகாப்பு கட்டமைப்பை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டும் வகையில் காணப்படும் விதிமுறைகளை அகற்றி அனைத்து மக்களுக்கும் பொதுவானதொரு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க பொலிஸ் வரலாற்றில் பல தடவைகளில் கறுப்பினத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.