ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க பிரதி நிதிகள் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று ஒன்று கூடினர். அதன்போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் பொது செயலாளர் அகில்விராஜ் காரியவசம் பேச்சு வார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் குறித்து விமர்சனங்களை முன்வைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதை காணக்கூடியதாக இருந்தது.