ஐய்யாயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஊடாக 40 இலட்சத்துக்கும் அதிமானோர் நன்மை அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக ஐய்யாயிரம் ரூபா கிடைக்கப்பெறாதவர்களுக்கு இவ்வார இறுதிக்குள் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துலசிறி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜீவனோபாயத்தை இழந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.