12 ஆயிரத்து 235 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,282 பேர் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 16 பேர் குவைத்திலிருந்து வருகைதந்தவர்கள் என இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 835 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,