தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் இன்று தீர்மானிக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. வாக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது. தனிமைப்படுத்தல் ஆலோசனைகளுக்கு அமைய தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.