பொலிஸ் விசேட படையினர் புஸ்ஸ சிறைச்சாலையில் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்போது கஞ்சிபான் இப்ரான் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தில் இருந்து தொலைப்பேசி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசேட படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைக்கென குறித்த பொருட்கள் குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இனங்காணப்படாத தூள் வகை ஒன்றும் சிறைக்கூடத்தில் கிடைக்கபெற்றதாக பொலிஸ் விசேட படையணி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.