லெபனானில் ஆர்பாட்டங்கள் உக்கரமடைந்துள்ளன. 3 மாதகாலமாக அந்நாட்டில் ஆர்பாட்டங்கள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொருளாதார மாற்றம் மற்றும் மோசடிகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் போராட்டங்களில் ஈடுப்பட்ட 37 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டகாரர்கள் பாதுகாப்பு தரப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். அதனையடுத்து மோதல்கள் உக்கரமடைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.